மூலிகை மருத்துவத்தில் கோழிக்கான நோய்களை குணப்படுத்த பயிற்சி வகுப்பு
நாமக்கல் கால்நடை மருத்துவமனையில், நாட்டுக் கோழிகளுக்கு ஏற்படும் நோய்களை மூலிகை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்துதல் குறித்து, வரும் 23ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
நாமக்கல், திருச்சி ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கோழிகளுக்கான மரபு சார் மூலிகை ஆராய்ச்சி மையம் உள்ளது.
இங்கு நாட்டுக்கோழிகளுக்கு ஏற்படும் நோய்களை மூலிகை மருத்துவத்தின் மூலம் தடுக்கும் முறைகள் என்ற தலைப்பில், ஒரு நாள் பயிற்சி வகுப்பு, வரும் 23ம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
கோழிப்பண்ணையாளர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மையத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.