நாமக்கல்லில் திருவள்ளுவர் தின விழா: எம்எல்ஏ ராமலிங்கம் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழாவில் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.

Update: 2023-01-16 07:45 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழாவில் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு திருக்குறல் புத்தகங்களை வழங்கினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழாவில் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.

பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் திருவள்ளுவர் தினவிழா நடைபெற்றது. பேரவை தலைவர் புலவர் கருப்பண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருவள்ளுவர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இலவசமாக திருக்குறள் புத்தங்கங்களை அவர் வழங்கினார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் மணிமாறன், தெற்கு நகர பொருளாளர் அருட்செல்வன், பாவேந்தர் பேரவை செயலாளர் ரகோத்தமன், பொருளாளர் ஆறுமுகம், நல்லாசிரியர் மோகன், புலவர் பெரியசாமி, டால்பின் பாலன், செந்தில்குமார், நாச்சிமுத்து, வேல்சாமி, ரவிக்குமார் மற்றும் தமிழ் அறிஞர்கள், புலவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News