லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறும் தங்கமணி தொடர்புடைய 14 இடங்கள் எவை?

பள்ளிபாளையத்தில் தங்கமணியில் ஆடிட்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புச்சோதனை நடைபெற்று வருகிறது.

Update: 2021-12-20 03:15 GMT

நாமக்கல் மாவட்ட பள்ளிபாளையத்தில் சோதனை நடைபெறும்,  தங்கமணியின் ஆடிட்டர் செந்தில் குமாரின் அலுவலகம். 

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14, இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் விவரம் வருமாறு:-

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணியின் ஆடிட்டர் செந்தில் குமாரின் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. அதேபோல், நாமக்கல் பி.எஸ்.கே. பெரியசாமி, தீபன் சக்ரவர்த்தி, கே.சண்முகம் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


நாமக்கல்லில் பி.எம். மோகன், பி.எஸ்.கே. கார்டன்ஸ், ஹைலைன் சீனிவாசா ஃபார்ம்ஸ் நிறுவனத்திலும், அசோக் குமாரின் வீடு, சரண்யா நூற்பாலை, எஸ்.எம்.என். கோழிப்பண்ணை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


ஈரோடு

ஈரோட்டில் மூன்று இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தங்கமணிக்கு நெருக்கமான  செந்தில் நாதன், கோபாலகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

சேலம்

சேலம் மாவட்டத்தில் தங்கமணியின் நண்பரான குழந்தைவேலுவின் மகன் மணிகண்டன் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. 
Tags:    

Similar News