கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

Update: 2022-06-06 10:15 GMT

பைல் படம்.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையமான, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் லோகநாதன் வரவேற்றார். மாநில பொருளாளர் மலர்கண்ணன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்க வேண்டும். பணி நிரவலில் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள் முருகேசன், கண்ணன், செந்தில், செல்வன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News