நாமக்கல்லில் ஆசிரியர் மீது பாலியல் புகார்: உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு

நாமக்கல்லில் ஆசிரியர் மீது பெற்றோர்கள் பாலியல் புகாரளித்ததால் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-12-06 15:15 GMT

பைல் படம்.

நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, பெற்றோர்கள் மாவட்ட சிஇஓவிடம் புகார் அளித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனால் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக வேண்டும் என்று சில பெற்றோர்கள் மாவட்ட சிஇஓ மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்தநிலையில் மாணவி எழுப்பியுள்ள புகார் உண்மையில்லை. உள்நோக்கத்தோடு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இன்று மாலை பள்ளி வேலை நேரம் முடிந்ததும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் இரவு 8 மணியைக் கடந்தும் நீடித்து வருகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News