தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழாவையொட்டி மரக்கன்று நடும் விழா

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை கொண்டாடும் வகையில் நாமக்கல் நகராட்சி சார்பில் மரம் நாடும் விழா நடைபெற்றது.

Update: 2022-05-07 06:45 GMT

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை கொண்டாடும் வகையில், நாமக்கல் நகராட்சி சார்பில் எம்.பி ராஜேஷ்குமார் மரக்கன்று நட்டார்.

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை கொண்டாடும் வகையில், நாமக்கல் நகராட்சி சார்பில், மரம் நடும் விழா 8வது வார்டு   பெரியூர், வரதராஜ நகரில் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து  மரக்கன்றுகளை நட்டு வைத்து, தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை எடுத்துக்கூறி,  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து நகராட்சி தலைவர் கலாநிதி, உப தலைவர் பூபதி, கமிஷனர் சுதா மற்றும் கவுன்சிலர்கள் மரக்கன்றுகளை நட்டனர். 

Tags:    

Similar News