கொல்லிமலையில் சந்தனமரம் கடத்திய 2 பேர் கைது: ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல்
கொல்லிமலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 2 பேருக்கு வனத் துறையினர் ரூ. 50,000 அபராதம் விதித்தனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட காரவள்ளி சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை அலுவலர்கள், அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அவர்கள் சந்தன மரங்களை சிறிய அளவில் வெட்டி சாக்குப்பையில் போட்டு கடத்தியது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கொல்லிமலை, தேவனூர் நாடு பரமசிவம், சூலவந்திப்பட்டியைச் சேர்ந்த கனகதுரை என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இருவரிடமும் தலா ரூ. 25,000 வீதம் அபராதம் வசூல் செய்தனர்.