நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் பெயர் பலகைகள் அகற்றம்

நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களுடன் இருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டன.

Update: 2021-09-19 03:30 GMT

தனியார் நிறுவன விளம்பரத்துடன் இருந்த நாமக்கல் டவுன் காவல் நிலையத்தின் பெயர் பலகை அகற்றப்பட்டது.

தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் தனியார் நிறுவனங்களின் பெயருடன் கூடிய வகையில், காவல் நிலைய பெயர் பலகை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என்று போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தனியார் நிறுவன விளம்பரங்களுடன் கூடிய பெயர் பலகைகளை உடனடியாக அகற்ற மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து நாமக்கல் டவுன் போலீஸ் ஸ்டேசன் முன்பு தனியார் லாரி பாடி ஒர்க்ஷாப் விளம்பரத்துடன் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 25 காவல் நிலையங்களில் தனியார் விளம்பரத்துடன் கூடிய பெயர்ப் பலகைகள் ஒரே நாளில் அகற்றப்பட்டது.

Tags:    

Similar News