திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் மதுகடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2021-09-14 09:45 GMT

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க  நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்திருந்த பொதுமக்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா, குமாரமங்கலத்தை அடுத்த கோப்பம்பாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதை அறிந்த பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

குமரமங்கலம்-சித்தாளந்தூர் இடையே உள்ள கோப்பம்பாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த ரோடு வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் அங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் அது மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அங்கு மதுபானக்கடை அமைப்பதை கலெக்டர் தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News