நாமக்கல்லில் மக்கள் குறைதீர் முகாம் கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாம் பட்லூர் தொழிற் குழுவினருக்கு, ரூ. 7.63 லட்சம் மானிய உதவியை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

Update: 2023-03-13 11:30 GMT

பட்லூர் தொழிற் குழுவினருக்கு, ரூ. 7.63 லட்சம் மானிய உதவியை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 242 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட கலெக்டர் அவற்றை உரிய துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்களளை பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, வாழ்ந்துக் காட்டுவோம் திட்டத்தின் கீழ், திருச்செங்கோடு வட்டம், பட்லூர் தொழிற்குழுவினருக்கு விவசாய கழிவுகளிலிருந்து டீ கப் தயாரிக்கும் தொழில் தொடங்குவதற்கு, மாவட்ட கலெக்டரின் மானிய விடுவிப்பு தொகையாக ரூ.7.63 லட்சம் மதிப்பிலான பாங்க் டிராப்ட்டை வழங்கினார். மேலும், மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியின் கீழ் மாற்றுத்திறனாளி மங்கையர்க்கரசி என்பவருக்கு ரூ.5,600 மதிப்பிலான தையல் மெசினை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை, சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளார் (பொது) சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News