நாமக்கல் மாவட்ட கோட்ட அலுவலகங்களில் மின்வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம்

Consumer Grievance- நாமக்கல் மாவட்ட கோட்ட அலுவலகங்களில் மின்வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

Update: 2022-08-04 09:30 GMT

Consumer Grievance-  நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் ஆகஸ்ட் மாதத்திற்கான, மின் நுகர்வோர் குறைதீர் முகாம்கள், கோட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ளது

ஆகஸ்டு 5ம் தேதி காலை 11 மணிக்கு, நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. வருகிற 10ம் தேதி புதன்கிழமை பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 17ம் தேதிபுதன்கிழமை திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 24ம் தேதி புதன்கிழமை ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு குறைதீர் முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் நேரடியாக கலந்துகொண்டு புகார் மனுக்களைஅளித்து மின்வாரியம் சம்மந்தமான குறைகளுக்கு தீர்வு பெறலாம்.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News