தபால்துறை சார்பில் மார்ச் 3ம் தேதி வாடிக்கையாளர் குறைதீர் முகாம்

மாநில அளவில், தபால்துறை வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்க்கும் முகாம், வரும் மார்ச் 10ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

Update: 2022-02-25 01:00 GMT

இது குறித்து நாமக்கல் கோட்ட தபால்தறை கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தபால்துறை சார்பில், மாநில அளவில் நடத்தப்படும் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் நாள் முகாம்,  வருகிற மார்ச் 10ம் தேதி 11 மணிக்கு, சென்னையில் உள்ள தலைமை அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்களின் அஞ்சல் துறை சம்மந்தமான குறைகள் எதேனும் இருப்பின் நேரில் தெரிவித்து குறைகளை தீர்த்துக்கொள்வதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது.

பொதுமக்களுக்கு அஞ்சல் சம்மந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின், புகார்களை குறைதீர்க்கும் நாளன்று நேரிலோ அல்லது துணை இயக்குனர், (எஸ்பிஅண்ட்எப்எஸ்) தலைமை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம் சென்னை 600 002 என்ற முகவரிக்கு மார்ச் 4ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். .இந்த என்ற pgtn@indiapost.gov.in -என்ற இமெயில் முகவரிக்கு மனுக்களை அனுப்பி வைக்கலாம். தபால்துறையில், மணியார்டர், விபிபி, விபிஎல், பதிவு தபால், விரைவு தபால், போஸ்டல் இன்சூரன்ஸ் குறித்த புகார்கள் இருப்பின் அது குறித்து முழு விபரங்களையும் மனுவில் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News