நாமக்கல்லில் ஜன. 5ம் தேதி தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் ஜன. 5ம் தேதி தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

Update: 2021-12-30 03:15 GMT

தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற ஜன.5ம் தேதி மாøலை 3 மணியளவில், நாமக்கல் திருச்சி ரோட்டில், ஆண்டவர் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தபால்துறை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதேனும் இருந்தால், தங்களது புகார்களை தபால்துறை கண்காணிப்பாளருக்கு, வருகிற ஜன.3ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். புகார் அனுப்பும் உறையின் மீது, அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு சம்பந்தமாக என்று எழுதப்பட வேண்டும்.

புகார் கடிதத்தில் சேவைகள் குறித்த முழுத் தகவல்களும் குறிப்பிட வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு புகார்கள் தெரிவிக்க விரும்பினால், நேரடியாகவும் கலந்து கொள்ளலாம் என்று நாமக்கல் கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News