நாமக்கல் மாவட்டத்தில் 4 இடங்களில் 26ம் தேதி மக்கள் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 26ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிற உள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தெரிவித்தார்.

Update: 2022-06-24 01:30 GMT

பைல் படம்.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும்  குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுவுரைப்படி, நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் மற்றும் பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் வருகிற 26ந் தேதி ஞாயிற்றுக்கிழமை, தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், பேங்க் செக் தொடர்பான வழக்குகள், பேங்க் கல்விக் கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நில சொத்து பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்) விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி வழக்குகள் இந்த கோர்ட்டில் விசாரிக்கப்படும்.

மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. எனவே, பொதுமக்கள் யாருக்காவது, கோர்ட்டில் மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால், சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் நீர்வு காண மக்கள் நீதிமன்றத்தை அனுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News