ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 24 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல்

நாமக்கல்லில் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் 24 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.

Update: 2022-03-16 05:45 GMT

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 126 உபரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கலந்தாய்வில் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள பள்ளிகள் மற்றும் கூடுதல் ஆசிரியர்கள் பணியிடங்கள் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் காண்பிக்கப்பட்டன. இதில் 126 ஆசிரியர்களும் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளை தேர்வு செய்தனர்.

இந்நிலையில்,  நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் இடமாறுதல் அளிக்கும் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 24 ஆசிரியர்களுக்கு உள் மாவட்டத்துக்குள் இடமாறுதல் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News