நாமக்கல் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டூ வீலர் மோதி வாலிபர் உயிரிழப்பு
On lorry parked near Namakkal Two wheeler collision kills teenager
நாமக்கல் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது டூ வீலர் மோதியதால் வாலிபர் உயிரிழந்தார்.
கரூரில் இருந்து சேலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நாமக்கல், நல்லிபாளை யம் பைபாஸ் ரோட்டில் சென்றபோது திடீரென பழுதாகி நின்றது. இதையடுத்து லாரியை ரோட்டு ஓரம் நிறுத்தி விட்டு பழுதை சரி செய்யும் பணியில் டிரைவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக டூ வீலரில் வந்த பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை பகுதியை சேர்ந்த கருணாகரன்(26), லாரியின் பின்புற பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் படுகாயம் அடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.