கா.நா.பட்டி, கெட்டிமேடு பகுதிகளில் வரும் 24ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு

காளப்பநாய்க்கன்பட்டி மற்றும் கெட்டிமேடு பகுதிகளில் வரும் 24ம் தேதி, வியாழக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-22 08:30 GMT

பைல் படம்

காளப்பநாய்க்கன்பட்டி மற்றும் கெட்டிமேடு பகுதிகளில் வரும் 24ம் தேதி, வியாழக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரப்பு பணிகள் மேற்கொகள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 24ம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும். இதனால் காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், வரும் 24ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது.

* நாமக்கல் மாவட்டம் கெட்டிமேடு, துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 24ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படும். இதனால் கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாய்க்கனூர், பெருமாப்பட்டி, தூசூர், கொடிக்கால்புதூர், ரெட்டிப்பட்டி மற்றும் கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் 24ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News