நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு வழங்கல்

Latest News About Local Body Election in Tamilnadu -நாமக்கல் திமுக உட்கட்சித் தேர்தலில், 10 ஒன்றியங்களில், போட்டியிட விரும்புபவர்களுக்கு எம்.பி ராஜேஷ்குமார் வேட்பு மனுக்களை வழங்கினார்.

Update: 2022-06-15 05:45 GMT

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், உட்கட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினருக்கு, எம்.பி ராஜேஷ்குமார் வேட்பு மனுக்களை வழங்கினார்.

Latest News About Local Body Election in Tamilnadu - நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக உட்கட்சித் தேர்தலில், 15 ஒன்றியங்களில், போட்டியிட விரும்புபவர்களுக்கு எம்.பி ராஜேஷ்குமார் வேட்பு மனுக்களை வழங்கினார்.

திமுமுக தலைமை அறிவித்துள்ளபடி, கட்சியின் 15-வது பொதுதேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், புதுச்சத்திரம் வடக்கு, புதுச்சத்திரம் தெற்கு, மோகனூர், எருமப்பட்டி, ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய 10 ஒன்றியங்களுக்கான திமுக நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும், அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், 3 துணைச் செயலாளர்கள், 3 மாவட்டப் பிரதிநிதிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. தலைமைக்கழக பிரதிநிதி ஈரோடு இறைவன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராஜ்சயபா எம்.பியுமான ராஜேஷ்குமார், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேர்தலில் போட்டியிட விரும்பு திமுகவினருக்கு வேட்பு மனுக்களை வழங்கினார். இன்று மாலை மாலை 5 மணிக்குள், கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்டணத்துடன் வேட்பு மனுக்களை ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிகக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News