நாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நாமக்கல் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த, முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு.

Update: 2022-05-02 01:30 GMT

நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் படித்த, முன்னாள் மாணவ, மாணவியர், 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து ஆசிரியர்களுடன் குரூப் படம் எடுத்து மகிழ்ந்தனர்.

நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த, முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் கோட்டையில், நகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1997 முதல் 2002ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுடன் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தங்களின் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு பரிசு வழங்கி கவுரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் லோகேஷ்வரன் நினைவாக, பள்ளிக்கு ஒரு கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் ஆகியவற்றை, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ராஜன் மற்றும் தற்போதைய தலைமை ஆசிரியர் மரகதம் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுடன் குரூப் போட்டோ எடுத்து மகிழ்சியடைந்தனர்.

Tags:    

Similar News