நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் தேர் திருவிழா 8ம் தேதி துவக்கம்

நாமக்கல்லி அருள்மிகு பலபட்டறை பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழா வருகிற 8ம் தேதி துவங்குகிறது.

Update: 2022-05-06 01:45 GMT

பைல் படம்.

நாமக்கல்லி அருள்மிகு பலபட்டறை பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழா வருகிற 8ம் தேதி துவங்குகிறது.

நாமக்கல் மெயின் ரோட்டில் பிரசித்திபெற்ற பலபட்டறை மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேர்த்திருவிழா சுமார் 3 மாத காலம் சிறப்பபாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊராடங்கால் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, வருகிற 8ம் தேதி காலை 8.30 மணிக்கு திரளான பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வருவார்கள். இரவு கோயில் வளாகத்தில் சக்தி அழைப்பு, கம்பம் நடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெறும். 9 ஆம் தேதி காலை 6 மணிக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். 15 ஆம் தேதி மறுகாப்பு, 22 ஆம் தேதி வடிசோறு, மாவிளக்கு பூஜை நடைபெறும். 23ம் தேதி அதிகாலை அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், தேரோட்டம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் இரவு மாவிளக்கு ஊர்வலமும் நடைபெறும்.

24 ஆம் தேதி மாவிளக்கு, பொங்கள் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், 25 ஆம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 26 ம் தேதி கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து தினசரி நகரின் பல்வேறு பகுதிகளில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பழனிவேலு, உதவி கமிஷனர் ஆணையர் ரமேஷ் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News