புதன்சந்தையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, துவக்கி வைத்த எம்எல்ஏ

புதன்சந்தை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

Update: 2021-08-23 11:30 GMT

புதன்சந்தை பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கி வைத்த  எம்எல்ஏ ராமலிங்கம் மரக்கன்றுகளை நட்டார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், புதன்சந்தை முதல் உடுப்பம் செல்லும் ரோட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் துரை ராமசாமி, செல்லப்பம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தியாகராஜன், துணைத் தலைவர் சத்யபமா, முன்னாள் தலைவர் சுரேஷ், முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட டபலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக இந்த பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர்.

Tags:    

Similar News