நாமக்கல்: ஆடு மேய்க்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

Tamil Crime News- நாமக்கல் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2022-07-06 02:15 GMT

Tamil Crime News-நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகில் உள்ள கண்ணூர்பட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 70). இவர், வேலகவுண்டன்பட்டி அருகே பொம்மம்பட்டி பகுதியை சேர்ந்த தனது உறவினர் சுந்தரராஜன் (48) என்பவரது வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற நல்லம்மாள் வீடு திரும்பவில்லை. இதனால் சுந்தர்ராஜன், நல்லம்மாளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். அப்போது ஒரு கிணற்றில் நல்லம்மாள் இறந்த நிலையில் சடலமாக மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில், அங்கு வந்த, வேலகவுண்டம்பட்டி போலீசார், நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் நல்லம்மாள் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத் வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News