புதுச்சத்திரம் அருகே பால் வியாபாரி தற்கொலை

Latest Suicide News -புதுச்சத்திரம் அருகே பால் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-14 06:15 GMT

(பைல் படம்)

Latest Suicide News - புதுச்சத்திரம் அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (55). பால் வியாபாரியான இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, மனம் விரக்தியில் இருந்த ராமமூர்த்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதைத்தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ராமமூர்த்தி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததால் ராமமூர்த்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப தகராறு காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

பால் வியாபாரி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சத்திரம் சுற்றுவட்டார கிராம மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News