பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி ஏஜண்டுகள் ஆர்ப்பாட்டம்

LIC Agent -நாமக்கல் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி ஏஜண்டுகள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-06 01:45 GMT

பைல் படம்.

LIC Agent -பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி ஏஜண்டுகள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

ஏஜண்டுகள் சங்கத்தின் தலைவர் திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார். பாலிசிதாரர்கள் போனசை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். பணிக்கொடையை ரூ. 20 லட்சமாக உயர்த்த வேண்டும். நேரடி முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. திரளான ஏஜண்டுகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News