நாமக்கல் பகுதியில் வரும் 16 -ஆம் தேதி மின் தடை அறிவிப்பு

June 16 th power outage in Namakkal area

Update: 2022-06-14 07:00 GMT

நாமக்கல் பகுதியில் வரும்   16ம் தேதி மின் தடை ஏற்படும்  என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ,நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் துணை மின் நிலையத்தில் வருகிற 16ம் தேதி வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இதனால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஒ காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News