நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 22,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 22,456 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துப்பட்டது.

Update: 2022-01-09 03:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற 17 மெகா தடுப்பூசி முகாம்களில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள் என 457 நிலையான மையங்கள்மற்றும் 37 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 494 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைற்ற முகாமில் மொத்தம்22,456 பேருக்கு கொரோனா முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

டாக்டர்கள், நர்சுகள் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம் பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News