கொரோனா பரவல்: நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

கொரோனா பரவல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-08 12:00 GMT

இது குறித்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா தெற்று பரவல் காரணமாக, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும், மக்கள் குறைதீர் கூட்டம்,  மற்றும் தாலுக்கா அளவில் மாதந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டங்கள் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள மனுக்கள் பெட்டியில் சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News