நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் நாளை ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

Update: 2023-10-13 06:30 GMT

ரேஷன் கார்டு (கோப்பு படம்)

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு போன்ற சேவைகளை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேசன் கார்டுகளில் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், பொது விநியோக திட்ட செயல்பாடு குறித்த புகார்களை பதிவு செய்யவும், ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நாளை 14-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் ;தாசில்தார் அலுவலகங்களில் வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் இந்த குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் சம்மந்தப்பட்ட பகுதியில் நடைபெறும், குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேசன் கார்டு தொடர்பான தங்கள் குறைகளை, தீர்வு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News