வாசன் பிறந்தநாள்- நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தமாகாவினர் வழிபாடு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், வாசன் எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு, நகர தமாகா சார்பில், பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
நாமக்கல் நகர தமாகா சார்பில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் எம்.பி பிறந்தநாள் விழா, ஆஞ்சநேயர் கோயில் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் கோஸ்டல் இளங்கோ, துணைத்தலைவர் சிவா, பொருளாளர் சுப்பிரமணியன், நகர தலைவர் சக்திவெங்கடேஷ், வட்டார தலைவர் பாஸ்கரன், மாவட்ட மகளிரணி தலைவர் பாவாயி, சின்னசாமி, சரவணன், கனகராஜ், செல்வராஜ், சரவணன் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.