முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி: கலெக்டர் தகவல்

முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட உள்ளது.;

Update: 2025-04-08 06:20 GMT

பைல் படம் 

நாமக்கல், 

இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் மற்றும் கைம்பெண்கள் வயது உச்சவரம்பின்றி தொழில் தொடங்கிட பெறும் கடன் தொகையில் (ரூ. 1 கோடி வரை) 30 சதவீதம் மூலதன மானியம் மற்றும் 3 சதவீதம் வட்டி மானிய சலுகை பெறலாம். இந்த கடன் பெற வருமான உச்சவரம்பு இல்லை. இதுவரை உற்பத்தி, சேவை சார்ந்த தொழில்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது வர்த்தகம் சார்ந்த அனைத்து தொழில்களும் செய்திட அனுமதிக்கப்பட்டுள்ளது. மண் அள்ளும் வாகனம் மற்றும் மண் நிரவும் வாகனங்கள் வாங்கிட ஒரு நிதியாண்டில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும். விவசாயத்துடன் நேரடி தொடர்புடைய தொழில்களான, பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, சரக்குப் போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து தொழில்களுக்கு ஒரு விண்ணப்பதாரர் இரு வாகனங்கள் மட்டுமே வாங்கிடலாம்.

இது குறித்து மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அல்லது 04286-233079 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News