விவசாய மின் இணைப்பு விண்ணப்பத்தில் திருத்தம்: டிச.29ல் சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்கள் பெயர் மாற்றம், சர்வே எண் மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ள, 29ம் தேதி மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-12-27 11:45 GMT

இதுகுறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில் விவசாய மின் இணைப்பிற்குப் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள்,  பெயர் மாற்றம், சர்வே எண் மற்றும் உட்பிரிவு மாற்றம் போன்ற திருத்தங்கள் செய்து கொடுக்க சிறப்பு முகாம், நாமக்கல் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் வருகிற 29ம் தேதி நடைபெறுகிறது.

விண்ணப்பம் பெயர் மாற்றத்திற்கு இறப்பு சான்று, வாரிசு சான்றிதழ், பங்குதாரர்களின் ஆட்சேபனை இல்லா கடிதம், வருவாய் அலுவலர் சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். சர்வே எண் உட்பிரிவு மாற்றத்திற்கு வருவாய் அலுவலர் சான்று மற்றும் வரைபடமும், சர்வே எண் மற்றும் கிணறு மாற்றத்திற்கு பழைய, புதிய வருவாய் அலுவலர் சான்று, வரைபடம் ஆகியவை கொண்டு வர வேண்டும். மாற்றம் தேவைப்படுபவர்கள் இம்முகாம்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News