மகள் காதல் திருமணம்: பாேலீஸ் ஜீப் முன்பு படுத்த உருண்டு பெற்றாேர் பாசப்பாேராட்டம்

காதல் திருமணம் செய்த மகளை, தங்களிடம் ஒப்படைக்கக்கோரி போலீஸ் ஜீப் முன்பு பெற்றோர்கள் படுத்து புரண்டதால் பரபரப்பு.

Update: 2021-08-27 04:15 GMT

காதல் திருமணம் செய்து கொண்ட மகளை, தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, நாமக்கல் கோர்ட் வளாகத்தில் போலீஸ் ஜீப் முன்பு பெற்றோர்கள் படுத்து புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இராசிபுரம் தாலுக்கா தாண்டாகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருடைய மகள் பவதாரணி (23). இவரும் அதே பகுதியை சேர்ந்த மணி (வயது 25) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பவதாரணியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால், காதல் ஜோடி இருவரும் வீட்டை வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி ஆபீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்கள் இருவரையும், நாமக்கல் மாவட்ட கூடுதல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விஜயன் 2 பேரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது பவதாரணி, கணவர் மணியுடன் தான் செல்வேன் என உறுதியாக கூறினார். திருமண வயதை அடைந்து விட்டதால், அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என நீதிபதி கூறினார்.

இதைத்தொடர்ந்து, போலீசார் அவர்களை தங்களது ஜீப்பில் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த பவதாரணியின் பெற்றோர் தங்களது மகளை போலீஸ் ஜீப்பில் இருந்து இறக்கி தங்களிடம் ஒப்படைக்குமாறு, ஜீப் முன்பு ரோட்டில் படுத்து அழுது புரண்டனர். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே காதல் ஜோடியை மற்றொரு வாகனத்தில் ஏற்றி, போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் பவதாரணியின் பெற்றோரிடம் பேசி சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News