நாமக்கல் சொசைட்டியில் ரூ.1 கோடி மதிப்பு பருத்தி ஏலம் மூலம் விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.1 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-01-20 07:15 GMT

கோப்பு படம் 

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் (என்சிஎம்எஸ்) பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம் உள்ளிட்ட பகுதிகைளைச் சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 3,100 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.

சேலம், திருச்செங்கோடு, கொங்கணாபுரம், கரூர், திண்டுக்கல், திருப்பூர், அவிநாசி பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் பருத்தி விற்பனை நடைபெற்றது. ஏலத்தில், ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 190 முதல் ரூ.11 ஆயிரத்து 322 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ.11 ஆயிரத்து 269 முதல் ரூ.15 ஆயிரத்து 666 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 299 முதல் ரூ.6 ஆயிரத்து 705 வரையிலும் ஏலம் போனது.

Tags:    

Similar News