தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி குறித்து புகார்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

Update: 2021-12-02 12:15 GMT

பைல் படம்.

இதுகுறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிப்பதாவது:

ஒரு முறை பயன் படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது. ஆய்வுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து மூடுதல் உத்தரவுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்து வருகிறது. இருப்பினும் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்குள் சிறிய இடங்களில் சட்டவிரோதமாக சில நிறுவனங்கள் செயல்படுகிறது.

இத்தகைய உற்பத்தியாளர்களை அடை யாளம் காண்பது கடினமாக உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் குறித்த தகவலை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர்களிடம் மக்கள் தெரிவிக்கலாம். அவர்களுடைய தொடர்பு விவரங்கள் தமிழ்நாடு கட் டுப்பாடு வாரியத்தின் இன்டர்நெட்டில் கொடுக் கப்பட்டுள்ளன. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் பங்களிக்கும், சுற்றுச் சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு, அவர்களின் பங்களிப்பிற்காக பாராட்டும், பரிசுகளும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News