முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு: சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-12-14 12:15 GMT

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு சம்பவத்திற்கு, சிபிஐ விசாரணை கோரி நாமக்கல்லில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவர் மணிகண்டன், போலீசாரால் தாக்கப்பட்டு, மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிபிஐ மூலம் விசாரணை நடத்தக்கோரி, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் கவின் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். மாநில செயலாக்க குழு உறுப்பினர் பிரபு, அலுவலக செயலாளர் காளிராஜன், சட்டக்கல்லூரி பொறுப்பாளர் பிரசாந்த, நகர அமைப்பு செயலாளர் அன்பு உள்ளிட்ட திரளான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News