மாநில அளவிலான வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் வாழ்த்து

மாநில அளவிலான வாள்சண்டை போட்டியில் பதக்கங்கள் வென்ற நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பாராட்டினார்.

Update: 2021-11-27 10:45 GMT

மாநில அளவிலான வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

மாநில அளவிலான வாள்சண்டை போட்டி, சென்னையில் கடந்த 22 மற்றும் 23ம் தேதிகளில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வாள்சண்டை போட்டியாளர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு விளையாட்டு விடுதி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் மொத்தம்-27 பதக்கங்களைப் வென்று மாவட்டத்திற்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் இரண்டு மாணவிகள் மற்றும் 4 மாணவர்கள் பஞ்சாபில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றக உள்ளனர். மாநில அளவிலான வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்(பொ) சிவரஞ்சன், வாள்சண்டை பயிற்சியாளர் பிரபுகுமார், கால்பந்து பயிற்சியாளர் கோகிலா மற்றும் கோ-கோ, கபாடி பயிற்சியாளர் புவனேஷ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News