ஆயுதங்களால் இரு கோஷ்டியினர் மோதல்: இலங்கை தமிழர் முகாமில் பரபரப்பு

நாமக்கல் அருகே, இலங்கை அகதிகள் முகாமில், இரு கோஷ்டியினர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-01 11:39 GMT

நாமக்கல் மாவட்டம், எம்.மேட்டுப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இம்முகாமை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (55), அவரது மகன் தினேஷ்குமார் (27). சம்பவத்தன்று இரவு 9.30 மணிக்கு தினேஷ்குமார்,  ஒரு சரக்கு ஆட்டோவில் முகாமிற்கு வந்துள்ளார். அந்த நேரத்தில், அதே முகாமைச் சேர்ந்த, துஷ்யேந்திரன் (20) மற்றும் அவரது நண்பர்கள் 4பேர், அங்கு ரோடு ஓரம் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இந்த மோதலில், ஒருவரை ஒருவர் அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களால் தாக்கிக் கொண்டனர். அதில், படுகாயம் அடைந்த ஸ்ரீதரன், தினேஷ்குமார் இருவரையும்,  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு ஆம்புலனர் வாகனத்தில் நாமக்கல் அழைத்து வந்தனர்.

அப்போது, ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி மர்ம கும்பல், மீண்டும் துஷ்யேந்திரனை தாக்கியது. அந்த தாக்குதலில், படுகாயம் அடைந்த அவரை, மேல் சிகிச்சைக்காக, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News