சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி அலங்காரம்..!

சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

Update: 2024-04-20 10:00 GMT

இன்று, சித்திரை மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சிறப்பு முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

நாமக்கல் :

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, சித்திரை மாத முதல் சனிக்கிழøமையை முன்னிட்டு உயர்தர முத்துக்களால் உருவாக்கப்பட்ட சிறப்பு முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையத்தில், கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார்.

இன்று சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 9 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறபு பூஜைகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு, நல்லெண்ணெய், மஞ்சள் சந்தனம், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்றது. தொடர்ந்து சுவாமிக்குசிறப்பு அலங்காரம் நடைபெற்றது. விலை உயர்ந்த முத்துக்களால் ஆஞ்சநேயருக்காக உருவாக்கப்பட்ட, முத்து அங்கியை பட்டாச்சாரியார்கள் சுவாமிக்கு அணிவித்தனர். பின்னர் 1 மணியளவில் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறை தினமானதால், வழக்கத்தை விட இன்று ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News