நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்- 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்- 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.

Update: 2022-08-10 02:00 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 92 பணியிடங்கள் காலியாக உள்ளது.

இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நாளை (ஆக.11) முதல் தொடங்க உள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி அல்லது onlineeclassnkl@gmail.com என்ற இமெயின் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

அதுபோல் http://forms.gle/vTY9tL1pbrEy7crR6 வெப்சைட்டில் அல்லது நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News