சேந்தமங்கலம் அருகே கள்ளத்தொடர்பு தகராறில் ஜோதிடர் கொலை : ஒருவர் கைது

சேந்தமங்கலம் அருகே ஜோதிடரை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தறித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-11 05:45 GMT

பைல் படம்.

சேந்தமங்கலம் அருகே கள்ளத்தொடர்பு தகராறில் ஜோதிடர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தறித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (60). ஜோதிடர். இவருடைய மனைவி பேபி (50). இவர்களுக்கு நிரேஷ் குமார் (34), சிமல் (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகள் முன்பு, கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை சுந்தர்ராஜன் வீட்டில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் செபி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிச் சென்ற நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து, போலீசார் சுந்தர்ராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த காலத்தில் சுந்தர்ராஜனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதற்கிடையே சேந்தமங்கலம் அருகே சாலையூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (23) என்பவர் கொண்டமநாயக்கன்பட்டியில் தறிப்பட்டறை நடத்தி வந்தார். அங்கு 50 வயது பெண் வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது, கார்த்திக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. 

Tags:    

Similar News