மோகனூர் அருகே டூ வீலரில் இருந்து தவறி விழுந்த ஜோதிடர் பலி

மோகனூர் அருகே டூ வீலரில் இருந்து தவறி விழுந்த ஜோதிடர் உயிரிழந்தார்.

Update: 2022-02-25 11:00 GMT

மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் பாவடித்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (48), ஜோதிடர். இவர் சம்பவத்தன்று ஜோதிடம் பார்ப்பதற்காக, காட்டுப்புத்தூருக்கு சென்று விட்டு, இரவு தனது டூ வீலரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது,  ஒருவந்தூர் பகுதியில் உள்ள ஒரு வேகத்தடையில் ஏறியபோது, மொபட் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

இதனால் கீழே விழுந்த நடராஜன் தலையில் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் இறந்தார். இதுகுறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News