வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள்: எம்.பி உறுதி
Government School News - வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் மேஜை, நாற்காலிகள் வழங்குவதாக எம்.பி சின்ராஜ் உறுதியளித்தார்.
Government School News - நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அடிப்படை வசதிகள் தேவை மற்றும் கூடுதல் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் தேவை என்று, பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் மற்றும் பொதுமக்கள் நாமக்கல் எம்.பி சின்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதன் அடிப்படையில் எம்.பி சின்ராஜ், வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பள்ளியின் வளர்ச்சி குறித்து ஆசிரியர்களிடம் ஆலோசனை செய்தார். அப்போது அப் பள்ளிக்கு பார்லிமென்ட் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கும் மற்றும் மாணவ மாணவிகள் அமர்ந்து படிக்கும் வகையில் 75 ஜோடி மேசை, நாற்காலிகள் வழங்குவதாகவும் உறுதியளித்தார். நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக செயலாளர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2