நாமக்கல் மாவட்டத்தில் கந்து வட்டி புகார் விசாரிக்க நாளை சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் கந்து வட்டி புகார்களை விசாரிக்க காவல் துறை சார்பில் நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Update: 2022-07-27 01:30 GMT

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி.சாய் சரண் தேஜஸ்வி.

நாமக்கல்லில் கந்துவட்டி பிரச்சினை குறித்து காவல்  துறை சார்பில் நாளை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர், அது குறித்து புகார் மனுக்களை அளிக்க சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. நாளை 28-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாவட்ட எஸ்.பி மற்றும் அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களிடமும் பொதுமக்கள் நேரடியாக புகார் மனுக்களை கொடுக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுக்களின் மீது உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News