குடும்ப தகராறில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

ஜேடர்பாளையம் அருகே குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-02-18 06:30 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஜேடர்பாளையம் அருகே உள்ள நகப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராஜா (37), கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த ராஜா கடந்த 15-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ராஜாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பதிரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோழிப்பண்ணையில் மின்வொயர் திருடிய பெண் கைது

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பெரும்பாலளிப்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (71). கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை 11 மணியளவில் இவரது கோழிப்பண்ணையில் மின் மோட்டாருக்காக பொருத்தப்பட்டிருந்த 10 மீட்டர் நீளமுள்ள மின்சார கேபிள் ஒயரை பெண் ஒருவர் அறுத்து திருடியுள்ளார்.

அதைக் கண்ட ராமலிங்கம் மற்றும் சிலர் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், படிவச்சேரி முருகன் கோவில் தெருவை சேர்ந்த சங்கீதா (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ஒயரை பறிமுதல் செய்த போலீசார், சங்கீதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News