நாமக்கல் மாவட்டத்தில் 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்டத்தில்வருகிற 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.

Update: 2022-08-05 11:00 GMT

பைல் படம்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் பேரில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்றம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், பரமத்தி சார்பு நீதிமன்றம், சேந்தமங்கலம் நீதிமன்றம் மற்றும் குமாரபாளையம் நீதிமன்றத்தில் வருகிற 13-ம் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.

ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.

நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் குறிப்பிட்ட நிலுவையில் உள்ள வழக்குகளை சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு பெறலாம் என மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News