கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்
சிமெண்ட், கம்பி மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்.
சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களின் விலையை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்றினர். இதனை கண்டித்தும் விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் கொரோனா காலத்தில் ஏற்கனவே நசிந்துள்ள கட்டுமான தொழில் இந்த விலையேற்றத்தால் மேலும் நசிந்து விடும் எனவே விலையேற்றத்தை கண்காணிக்க ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொறியாளர்கள், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.