குமாரபாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மவுன ஊர்வலம்
குமாரபாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் அருகே பாதரை நிதி நிறுவன அதிபர் கவுதம் படுகொலையை கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
மாநில அவை தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். காவிரி பாலத்தில் இருந்து கவுதம் இல்லம் வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.