50 ஆண்டுகளாக பணியாற்றும் எழுத்தர்களுக்கு மரியாதை செலுத்திய சார்பதிவாளர்

Tamil Nadu Register Office - குமாரபாளையத்தில் 50 ஆண்டுகளாக பணியாற்றும் ஆவண எழுத்தர்களுக்கு சார்பதிவாளர் மரியாதை செலுத்தினார்.

Update: 2022-07-02 01:30 GMT

குமாரபாளையத்தில் 50 ஆண்டுகளாக பணியாற்றும் ஆவண எழுத்தர்களுக்கு சார்பதிவாளர் மரியாதை செலுத்தினார்.

Tamil Nadu Register Office -குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலகம் 1972, ஜூலை 1ல் துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 50 ஆண்டுகளாக ஆவண எழுத்தர்களாக சந்திரசேகரன், மதியழகன், சோமசுந்தரராஜன், இன்பநாதன் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பணியை பாராட்டும் வகையில் சார்பதிவாளர் முத்துசாமி, இந்த நான்கு பேர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அனைத்து ஆவண எழுத்தர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ஆவண எழுத்தர்களை கவுரப்படுத்திய சார்பதிவாளர் முத்துசாமிக்கு ஆவண எழுத்தர்கள் சங்கம் சார்பில் சங்க நிர்வாகி சண்முகசுந்தரம் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News