வல்வில் ஓரி விழாவில் இருதரப்பினர் மோதல் வழக்கில் சமரசம்
வல்வில் ஓரி விழாவிற்கு சென்ற பொது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் வழக்கில் சமரசம் செய்து மனுவை வாபஸ் பெற்றனர்.
வல்வில் ஓரி விழாவிற்கு சென்ற பொது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் வழக்கு வேண்டாம் என மனு வாபஸ்
கொல்லி மலையில் நடந்த வல்வில் ஓரி விழாவிற்கு சென்ற பொது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் வழக்கு வேண்டாம் என மனு வாபஸ் பெற்றனர்.
ஆடி.18 அன்று வல்வில் ஓரி விழாவிற்கு வெப்படை பகுதியில் இருந்து இரு தரப்பினர் சென்றனர். இதில் சேந்தமங்கலம் பகுதியில் இரு தரப்பினருக்கும் நடந்த தகராறில் சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது பற்றி சேந்தமங்கலம் போலீசார் தலா இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இரு தரப்பினரும் சமாதனம் பேசியதால், இரு தரப்பினரின் புகாரை வாபஸ் பெறுவதாகவும், மேல் நடவடிக்கை ஏதும் வேண்டாம் எனவும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.