குமாரபாளையம் அருகே கோழிகளுக்கு பரவும் புதிய நோயால் பொதுமக்கள் பீதி
குமாரபாளையம் அருகே கோழிகளுக்கு பரவும் புதிய வகை நோயால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோழிகளுக்கு கழுத்து பகுதயில் புள்ளிகளாக, வீக்கமாக உள்ளது. அதிக எடை கொண்ட கோழிகள் கூட சில நாட்களில் மிகவும் எடை குறைந்து விடுகிறது என அப்பகுதி விவசாயிகள் கூறி வருகின்றனர்.
கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டனர்.